
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜுனைத் கான். இவர் இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 190 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 76 ஒருநாள், 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 2019ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து ஜுனைத் கானை பாகிஸ்தான் அணி தேர்வு செய்யாமல் இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டுமென்றால், கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாகப் பழகி, தொடர்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது என்று ஜுனைத் கான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், “கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நமக்கு நல்ல நட்பு தொடர்ந்தால், அனைத்து விதமான போட்டிகளிலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். நமது திறமையை நிரூபிக்கலாம். ஆனால், கேப்டனுடனும், நிர்வாகத்துடனும் நெருக்கமாக இல்லாவிட்டால், அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் பாகிஸ்தான் அணியின் நிலைமை.