
வெஸ்ட் இண்டீஸுல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அனி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 1 என கைப்பற்றிவிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் வீரர் இஷான் கிஷான் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். எனினும் மறுமுணையில் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஃபார்ம் அவுட் என்ற விமர்சனங்களுக்கு அவர் முற்று புள்ளி வைத்தார். மொத்தமாக 40 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 64 ரன்களை விளாசினார்.
ஸ்ரேயாஸுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய இளம் வீரர் தீபக் ஹூடா 25 பந்துகளில் 38 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி 13 ஓவர்களில் 122 /3 ரன்கள் என்ற வலுவான நிலைக்கு சென்றது. விக்கெட்கள் ஒருபுறம் விழுந்தாலும் இந்திய அணி தனது அதிரடி ஃபார்முலாவை மட்டும் விடவில்லை. அதே ரன்ரேட்டை தொடர்ந்து வெளிகாட்டி வந்தது.