
இந்தியா - இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஜுலை.18) கொழும்புவில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி எந்தவிதம் சிரமும் இன்றி மிக எளிதாக வெற்றிப் பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1- 0 என முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் வெற்றி குறித்து இலங்கை அணியின் சமிகா கருணரத்னே கூறுகையில், "டாட் பந்துகளை விட விக்கெட்டுகளை பெறவே முயற்சித்தோம். எங்கள் பவுன்சர்களையும் எங்கள் வேகத்தையும் பயன்படுத்த முயற்சித்தோம். இந்தியா ஒரு சிறந்த அணி, அவர்கள் எங்களைத் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்று எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் விக்கெட்டுகளை எடுத்திருந்தால், அவர்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். பவர் பிளேயில் நாங்கள் ஒரேயொரு விக்கெட் மட்டுமே பெற முடிந்தது. பவர் பிளேயில் 2 அல்லது 3 விக்கெட்டை எடுத்திருந்தால், ஆட்டத்தின் போக்கை ஓரளவுக்கு மாற்றியிருக்கலாம்.