
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-வங்கதேச அணிகள் இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தபடி தங்களது ஆட்ட அணுகுமுறையை மாற்றி விளையாட தவறியதால் விக்கெட்டை விரைவாக பறிகொடுத்தனர்.
முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி உத்வேகத்துடன் இருக்கும் வங்கதேச அணி சொந்த மண்ணில் கடைசியாக 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது போல் இந்த முறையும் வென்று சாதிக்க வேண்டும் என்று எல்லா வகையிலும் முயற்சிக்கும்.