
India vs England: Root, Rahane Back Stokes's Decision To Pull Out (Image Source: Google)
கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதால், கரோனா நெறிமுறைகள் மிகக்கடுமையாக பின்பற்றப்படுகின்றன. வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் இருந்துதான் விளையாடி வருகின்றனர்.
பயோ பபுள் வீரர்களுக்கு கடுமையான மன உளைச்சலையும், மன இறுக்கத்தையும் உண்டாக்குகிறது. கிரிக்கெட் வீரர்கள் மனவலிமையுடன் இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. பல வீரர்கள் இந்த பயோ பபுளில் கஷ்டப்பட்டு இருந்தாலும், சில வீரர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில், தனது மனநிலை சரியில்லை என்று கூறி கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியிருக்க விரும்புவதாக கூறி ஒதுங்கினார் இங்கிலாந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.