
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி நாளை துபாய் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளுக்குமே இது வாழ்வா? சாவா? போட்டியாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது. 2ஆவது இடத்திற்கு தற்போது நியூசிலாந்து மற்றும் இந்திய அணி போட்டிப்போடுகிறது. இதன் பின்னர் ஸ்காட்லாந்து, நமிபியா, ஆஃப்கானிஸ்தான் போன்ற சிறிய நாடுகளுடன் தான் போட்டி உள்ளதால், நியூசிலாந்தை வென்றால் தான் இந்தியாவால் அரையிறுதி வாய்ப்பை பிராகசப்படுத்த முடியும்.
இப்படிபட்ட முக்கியமான போட்டிக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகின்றனர். குறிப்பாக கடந்த போட்டியில் சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், தவறை சரிசெய்ய பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் ப்ளேயிங் 11 நேற்று இரவு இறுதிசெய்யப்படவிருந்தது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்களின் உடற்தகுதி பரிசோதிக்கப்படவிருந்தது. இந்நிலையில் அதில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.