
Indian Women Cricketers Need A Players' Association: Isa Guha (Image Source: Google)
கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரெலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. மேலும் இப்போட்டியை 86,000 க்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில் இத்தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்த இந்திய அணிக்கு, 5 லட்சம் டாலர் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் தொடர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்துள்ள நிலையிலும் பிசிசிஐ அத்தொகையை வீராங்கனைகளுக்கு வழங்கவில்லை என்ற தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து ஐசிசியின் தலைமை நிர்வாக அலுவலர் டாம் மொஃபாட் கூறுகையில், "கிரிக்கெட் விளையாட்டுகளில் வீரர்களின் கள செயல்திறனுக்கான பரிசுத் தொகை வழங்கப்படுகிறது, இந்தப் பரிசுத்தொகையை தாமதமாக கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.