
இந்திய அணிக்கு கபில் தேவுக்குப் பிறகு சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்டவர் ஹர்திக் பாண்டியா. அதிரடி பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் அணியின் வெற்றிக்கு முழு பங்களிப்பை அளிக்கக்கூடியவர்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்பதால் தான் ஹர்திக் பாண்டியாவிற்கு அணியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் 2018 ஆசிய கோப்பையின்போது, முதுகுப்பகுதியில் அடைந்த காயத்திற்கு பிறகு, அவரது பணிச்சுமை மீது கவனம் செலுத்தப்படுகிறது. எனவே அவர் கடந்த 3 ஆண்டுகளாகவே பந்துவீசவில்லை.
ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதியை கருத்தில்கொண்டு அவர் பந்துவீசவைக்கப்படுவதில்லை. ஹர்திக் பாண்டியா பந்துவீசாதது இந்திய அணி காம்பினேஷனை வெகுவாக பாதிக்கிறது. அதனாலேயே, கடந்த 3 ஆண்டுகளாகவே இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவரும் ஹர்திக் பாண்டியாவிற்கு, இலங்கைக்கு எதிரான தொடர் அருமையான வாய்ப்பாக அமையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.