பயோ பபுள் விதியை மீறிய இலங்கை வீரர்களுக்கு 2 ஆண்டு தடை?
கொழும்பு: இங்கிலாந்தில் கரோனா விதிகளை மீறிய இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து சென்ற இலங்கை அணி, ஒருநாள் தொடரில் பங்கேறு விளையாடியது. இத்தொடரின் போது பயோ பபுள் சூழலில் இருந்த இலங்கை அணி வீரர்கள் டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா, குசல் மெண்டிஸ் விதிகளை மீறி வெளியே சென்றனர்.
அவர்கள் மூவரும் டர்ஹாம் பகுதியில் சுற்றித்திரிந்தது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது. இதையடுத்து விதிகளை மீறிய மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டு, இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டனர்.
இதனிடையே இலங்கை கிரிக்கெட் போர்டின் 5 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு, நேற்று மூவரிடமும் சம்பவம் குறித்து விசாரித்தது.
இந்த விசாரணையின் முடிவில் 'குசல் மெண்டிஸ், குணதிலகாவுக்கு 2 ஆண்டுகள், டிக்வெல்லா என மூவரும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 18 மாதங்கள் தடையும், ரூ. 19 லட்சம் அபராதம் விதிக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Win Big, Make Your Cricket Tales Now