 
                                                    
                                                        IPL 2021: BCCI directs six days mandatory quarantine for players coming from UK (Image Source: Google)                                                    
                                                கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்த இந்திய அணி வீரர்களும் இத்தொடருக்காக அமீரம் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் வீரர்கள் அழைத்துவர தனி விமானங்கள் கிடைக்காததால், வீரர்கள் பயணிகள் விமானத்தில் அமீரகம் சென்றுள்ளனர்.
அதன்படி ஜஸ்பிரித் பும்ரா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் பயணிகள் விமானத்தில் நேற்று மான்செஸ்டர் நகரிலிருந்து துபாய் புறப்பட்டுச் சென்றனர்.
 
                         
                         
                                                 
                         
                         
                         
                        