
IPL 2021: Chennai Super Kings won by 6 wkts against RCB (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோரது அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 70 ரன்களையும், விராட் கோலி 53 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் டுவைன் பிராவோ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.