ஐபிஎல் 2021: ருத்ர தாண்டவமாடிய ஜடேஜா; ஆர்சிபியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிஎஸ்கே!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு ஃபாப் டூ பிளெஸிஸ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிலும் 20ஆவது ஓவரில் ரவீந்திர ஜடேஜா 37 ரன்களை விளாசி அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களை சேர்த்தது. சிஎஸ்கே அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 62 ரன்களையும், டூ பிளெசிஸ் 50 ரன்களை சேர்த்தனர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு தொடக்கம் முதலே சிஎஸ்கே பந்துவீச்சாளர்களால் சிக்கல் ஏற்பட்டது. அணியின் கேப்டன் விராட் கோலி 8 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ரவீந்திர ஜடேஜாவின் அபார பந்துவீச்சில் கிளென் மேக்ஸ்வெல், ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் களமிறங்கிய வீரர்களும் தொடர்ந்து சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்த சிஎஸ்கேவின் வெற்றி உறுதியானது.
பின்னர் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி, ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now