
IPL 2021: Delhi Capitals can be sure of finishing in top two, says Pant (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதனைத் தொடர்ந்து 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு சென்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில்,“இந்த போட்டி கடினமான போட்டியாகவே அமைந்தது. ஈசியாக இருந்த போட்டியை நாங்களே கடினமாக மாற்றிக்கொண்டோம். இறுதியில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி.