ஐபிஎல் 2021: 136 ரன்களில் சுருண்டது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 137 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு வழக்கம் போல் ஃபாஃப் - கெய்க்வாட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் ஃபாஃப் 10 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கெய்க்வாட் 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ராபின் உத்தப்பா 19, மொயீன் அலி 5 என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு - எம் எஸ் தோனி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதில் அம்பத்தி ராயுடு அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களைச் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now