
IPL 2021: Eoin Morgan 'Incredibly Excited' To Have The Fans Back In Stadium (Image Source: Google)
கரோனா தொற்றால் பாதியில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், தற்போது மீண்டும் வருகிற 19ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டு வந்த இத்தொடரில் தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிகளுக்கான டிக்கெட் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பார்வையாளர்கள் மத்தியில் ஐபிஎல் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.