Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: துபாய் வந்திறங்கிய சிஎஸ்கே வீரர்கள்!

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதற்காக சிஎஸ்கே அணியின் ஜடேஜா, புஜாரா, மோயீன் அலி, ஷர்துல் தாக்கூர் இன்று துபாய் வந்தடைந்தனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 12, 2021 • 16:02 PM
IPL 2021: Jadeja, Pujara, Moeen Ali arrive in Dubai, to undergo six-day quarantine
IPL 2021: Jadeja, Pujara, Moeen Ali arrive in Dubai, to undergo six-day quarantine (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெற்றது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.

மேலும் நேற்று முந்தினம் தொடங்க இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் துபாய்க்கு படையெடுத்து வருகின்றனர்.

Trending


அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, சட்டேஸ்வர் புஜாரா, மொயீன் அலி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இன்று துபாய் வந்தடைந்தனர். மேலும் துபாய் வந்த இவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட ஆறு நாள்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாம் கரண், நாளைய தினம் துபாய் வந்தடைவார் என தகவல்கள் வெளியேகியுள்ளது. முன்னதாக சிஎஸ்கே அணி வீரர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதியே துபாய் சென்றடைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement