
IPL 2021: Morgan, McCullum proud of KKR fightback (Image Source: Google)
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 2014ஆம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியது. 3ஆவது பட்டத்துக்காக போராடிய கொல்கத்தா அணி 27 ரன்களில் சிஎஸ்கே அணியிடம் தோல்விஅடைந்தது.
இந்தியாவில் நடந்த இந்த சீசனின் முதல் சுற்றில் 7 போட்டிகளில் 2 வெற்றிகள், 5 தோல்விகள் என பின்தங்கியிருந்தது கொல்கத்தா அணி. ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் வந்தபின் கொல்கத்தா அணியினரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது.
ஒவ்வொரு போட்டியிலும் ஆக்ரோஷமான பேட்டிங்கையும், பந்துவீச்சையும் கையாண்டது இறுதிப்போட்டி வரை முன்னேற காரணமாக அமைந்தது.