ஐபிஎல் 2021: மும்பை பந்துவீச்சில் 135 ரன்னில் சுருண்ட பஞ்சாப் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 42ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடிவருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் மந்தீப் சிங், கிறிஸ் கெயில், கேஎல் ராகுல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - தீபக் ஹூடா ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி அசத்தினர். பின் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அவரைத் தொடர்ந்து தீபக் ஹூடாவும் 28 ரன்னில் ஆட்டமிழக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் பும்ரா, பொல்லார்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Win Big, Make Your Cricket Tales Now