
IPL 2021: RCB romp home with a 7-wicket win (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 58 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் அர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - தேவ்தத் படிக்கல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் கோலி 25 ரன்னிலும் தேவ்தத் படிக்கல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.