Advertisement

ஐபிஎல் 2021: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த ஆர்சிபி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.

Advertisement
IPL 2021: RCB romp home with a 7-wicket win
IPL 2021: RCB romp home with a 7-wicket win (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 29, 2021 • 11:06 PM

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 29, 2021 • 11:06 PM

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 58 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் அர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - தேவ்தத் படிக்கல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் கோலி 25 ரன்னிலும் தேவ்தத் படிக்கல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரீகர் பரத் - கிளென் மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதில் ஸ்ரீகர் பரத் 44 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் 17.1 ஓவர்களிலேயே ஆர்சிபி அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 14 புள்ளிகளைப் பெற்று நடப்பு சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports