Advertisement
Advertisement
Advertisement

அஸ்வினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சேவாக்!

நியூஸிலந்துக்கு எதிரான 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வாங்கமாட்டேன் என்று மோர்கன் லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே அமர்ந்து தர்மா செய்தாரா என்று அஸ்வினுக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisement
IPL 2021: Sehwag pulls up Morgan after altercation with Ashwin, brings back memories of 2019 WC fina
IPL 2021: Sehwag pulls up Morgan after altercation with Ashwin, brings back memories of 2019 WC fina (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 29, 2021 • 10:50 PM

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் போது டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 29, 2021 • 10:50 PM

இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப்பந்த் எதிர் கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப்பந்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2ஆவது ரன் ஓடினார்.

Trending

பொதுவாக பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் மரபாகும், விதிகளில் அவ்வாறு இல்லாவிட்டாலும் மரபாக கடைபிடிக்கப்படுகிறது. மன்கட்அவுட் செய்யும் முன் நான் ஸ்ட்ரைக்கரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு எச்சரிக்கை செய்வது மரபாகும்.

அதன்பின் டிம் சவுதி வீசிய 20ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறினார், அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ கூற வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பார்த்த கேப்டன் மோர்கன் வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார். இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதில் அஸ்வினுக்கு ஆதரவாக சிலரும், மோர்கனுக்கு ஆதரவாக சிலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் அஸ்வினுக்கு அதரவாக இந்திய ஆணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

சேவாக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 2019, ஜூலை14ஆம் தேதி நினைவிருக்கா, உலகக் கோப்பைப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டு 6 ரன்கள் சென்றது. இது தார்மீகத்தை மீறியது இல்லையா. 

தார்மீகத்தை மீறிவிட்டோம் என்பதற்காக மோர்கன் உலகக் கோப்பையை வாங்கமாட்டேன் என்று லாட்ர்ஸ் மைதானத்துக்கு வெளியே அமர்ந்துதர்ணா செய்தாரா. நியூஸிலாந்து உலகக் கோப்பையை வென்றுவிட்டதா. அதை யாரும் பாராட்டவில்லையே” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 14-ம்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆட்டத்தை நினைவுபடுத்தி சேவாக் கடுைமயாகச் சாடியுள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டிரன்ட் போல்ட் வீசிய ஓவரில் மார்டின் கப்தில் பந்தை பீல்டிங் செய்து ரன் அவுட் செய்ய எறிந்தார்

அப்போபது பந்து பென் ஸ்டோக்ஸ் பேட் மீது பட்டு பவுண்டரிக்குச் சென்றுவிடும். இதைப் பார்த்த நடுவர் தர்மசேனா, 6 ரன்களை வழங்குவார். இந்த 6 ரன்களால்தான் ஆட்டத்தில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டு ஆட்டம் சமனில் முடிந்தது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பேட்ஸ்மேன் உடலில்பட்டாலோ அல்லது பேட்டில்பந்து பட்டாலோ மேற்கொண்டு ரன் ஓடக்கூடாது என்பது மரபு ஆனாலும் விதிகளில் இல்லை. இதைச்சுட்டிக்காட்டி சேவாக் ட்விட்டரில் மோர்கனை சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement