
IPL 2021: SRH finish their campaign with a 4-run win (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 52ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 44 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 5 ரன்னிலும், டேனியல் கிறிஸ்டியன் ஒரு ரன்னிலும், ஸ்ரீகர் பரத் 12 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.