Advertisement

விரைவில் பந்துவீச ஆரம்பிப்பேன் - ஹர்திக் பாண்டியா!

டி20 உலகக் கோப்பை தொடரில் ஹார்திக் பாண்டியா பந்துவீசுவாரா, மாட்டாரா? என்ற கேள்விக்கு அவரே பதிலளித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 02, 2021 • 18:15 PM
IPL 2021: Will bowl soon, efforts are on, says Hardik Pandya
IPL 2021: Will bowl soon, efforts are on, says Hardik Pandya (Image Source: Google)
Advertisement

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளார்கள். ஹார்திக் பாண்டியா நான்கு ஓவர்களையும் வீசுவார் என இதற்கு விளக்கம் அளித்தார் தேர்வுக்குழுத் தலைவர் சேதன் சர்மா. ஆனால், ஐபிஎல் 2021 போட்டியிலேயே பாண்டியா இதுவரை பந்துவீசாததால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவரால் எப்படிப் பந்துவீச முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

2019 அக்டோபரில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா, அதன்பிறகு விளையாடிய 41 சர்வதேச ஆட்டங்களில் 46 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். கடைசியாக ஜூலை 25 அன்று இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரு ஓவர்களை வீசினார். 2020 ஐபிஎல் போட்டி முதல் மும்பை அணியில் தொடர்ந்து விளையாடியபோதும் பாண்டியா பந்துவீசவில்லை. 

Trending


இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் மும்பை விளையாடிய நான்கு ஆட்டங்களில் இரண்டில் பாண்டியா பங்கேற்கவில்லை. பிறகு விளையாடிய இரு ஆட்டங்களிலும் ஒரு பேட்டராக அவர் பங்கேற்றார். 

இந்நிலையில் டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்துக்கு அளித்த பேட்டியில் பாண்டியா, “ரன்கள் எடுப்பது என்னுடைய தன்னம்பிக்கைக்கு முக்கியப் பங்களிக்கிறது. அணிக்காக ரன்கள் எடுப்பதுதான் முக்கியம். பிளே ஆஃப்புக்குத் தகுதி பெறுவதற்கான தடைகளை ஒவ்வொரு பந்தாகக் கடக்க வேண்டும்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

 மீதமுள்ள எல்லா ஆட்டங்களையும் நாங்கள் வெல்லவேண்டும். வேறுவழியில்லை. ஆனால் இதுபோன்ற நெருக்கடியான சூழல் தான் எங்களுடைய திறமையை முழுவதுமாக வெளிப்படுத்த உதவுகிறது. இது கட்டாயம் வென்றாக வேண்டிய ஆட்டம் என்பதை உணர்ந்துள்ளோம். நான் விரைவில் பந்துவீச ஆரம்பிப்பேன். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்” என்று தெரிவித்தார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement