
IPL 2022: Ajinkya Rahane Ruled Out Of The Rest Of The Tournament Due To Injury (Image Source: Google)
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் என்று போற்றப்பட்ட ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவை நோக்கி வந்துள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே சேர்க்கப்படவில்லை. இதனால் ஐபிஎல் மூலம் ரஹானே இந்திய அணியில் இடம்பிடித்து விடலாம் என எண்ணினார்.
ஆனால், கொல்கத்தா அணிக்காகவும் அவரால் ரன் சேர்க்க முடியவில்லை. இதனால் பிளேயிங் லெவனில் சில போட்டியில் இடம் கிடைக்கவில்லை.
ரஹானே நடப்பு சீசனில் 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சன்ரைசர்ஸ்க்கு எதிரான போட்டியின் போது ரஹானேவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஃபில்டிங்கில் கூட பங்கேற்கவில்லை. இந்த நிலையில், ரஹானேவின் காயம் கொஞ்சம் கவலையளிக்கும் வகையில் அமைந்தது.. இதனால் பயோ பபுளிலிருந்து ரஹானே விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.