
IPL 2022: All the IPL teams will play 14 matches in the league stage (Image Source: Google)
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டி வடிவங்களை பிசிசிஐ இறுதி செய்துள்ளது. இந்தாண்டு மெகா ஏலம், 2 புதிய அணிகள் சேர்ப்பு என பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளுக்கான அட்டவணைகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில் பிசிசிஐ தற்போது இறுதி செய்துள்ளது.
அதன்படி 15ஆவது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் இறுதியில் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே மாதம் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை அனைத்து லீக் போட்டிகளும் மும்பையில் உள்ள வான்கேடே, டி ஒய் பாட்டில், ப்ராபோர்ன் மற்றும் புனே மைதானங்களில் நடைபெறவிருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுகள் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டப்பட்டிருக்கிறது.