IPL 2022: Batting In Middle Order Cost The Game Against LSG, Says DC Skipper Rishabh Pant (Image Source: Google)
15 ஆவது சீசனின் நேற்றைய லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ், 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு, நிதானமாக 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிருத்வி ஷா (61), ரிஷப் பந்த் (39) ரன்கள் எடுத்தனர்.
பிறகு விளையாடிய லக்னோ அணியில், தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் களம் இறங்கினார்கள். டி காக் துவக்கம் முதலே அதிரடியை காட்ட, கே.எல்.ராகுல் 24 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பிறகு வந்த எவின் லூயிஸ் (5), அதிரடியாக ஒரு பக்கம் விளையாடி கொண்டிருந்த டி காக் (80) ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் போட்டி சற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.