
IPL 2022: BCCI instructs IPL Teams to start reaching Mumbai from March 8 (Image Source: Google)
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அட்டவணையே இன்னும் வெளிவராத சூழலில் அனைத்து அணிகளுக்குமான விதிமுறைகளை பிசிசிஐ கடுமையாக்கியுள்ளது. அதாவது அனைத்து அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் வரும் மார்ச் 8ஆம் தேதிக்குள் மும்பைக்கு வரவேண்டும் என உத்தரவிடபட்டுள்ளது.
மும்பைக்கு வந்தவுடன் இந்திய வீரர்களுக்கு 3 நாள்கள் கடுமையான குவாரண்டைனும், அயல்நாட்டு வீரர்களுக்கு 5 நாட்கள் குவாரண்டைனும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் பின்னர் தான் அவர்கள் அந்தந்த அணிகளுடன் ஒன்று சேர அனுப்பப்படுவார்கள்.