
IPL 2022: 'Chinna Thala' Suresh Raina Predicts MS Dhoni's Successor At Chennai Super Kings (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் வரும் சனிக்கிழமை ( மார்ச் 26 )முதல் தொடங்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பை மற்றும் புனே நகரங்களில் மட்டும் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு பல சுவாரஸ்யங்கள் இருந்த போதும், சுரேஷ் ரெய்னா இல்லாதது தான் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணிக்காக பல வெற்றிகளை குவித்துள்ள ரெய்னாவை மெகா ஏலத்தில் கைவிட்டனர். இதன் பின்னர் குஜராத் அணி ஜேசன் ராய்-க்கு பதிலாக ரெய்னாவை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்பட்டதும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. இதனால் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் தான் ஒரு மகிழ்ச்சி செய்தி வந்தது.