
ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் 131 ரன்கள் அடித்து தோற்ற நிலையில், 2வது போட்டியில் 210 ரன்கள் அடித்தும் தோற்றது.
இதற்கெல்லாம் காரணம் சென்னை அணியின் பந்துவீச்சாளர் பிரச்சினை தான். முன்னணி பந்துவீச்சாளரான தீபக் சஹார் காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டு பெங்களுரூ தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். கிறிஸ் ஜோர்டன் மற்றும் ஆடம் மில்னே ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால், அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் தீபக் சஹார் மீண்டும் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைப்பெற்று வந்த அவர், சமீபத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அவர் மீது பிசியோதெரபிஸ்ட் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது அவர் ஓரளவிற்கு உடற்தகுதி பெற்றுவிட்டதாக தெரிகிறது.