IPL 2022: CSK skipper Ravindra Jadeja feels team needs to practice with wet ball (Image Source: Google)
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் அடைந்த தோல்வியை தொடர்ந்து நேற்று மும்பை மைதானத்தில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து விளையாடியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி சென்னை அணி இந்த போட்டியில் முதலில் விளையாடியது.
தொடக்க வீரர் உத்தப்பா, மிடில் ஆர்டரில் ஷிவம் துபே, ராயுடு, பின்வரிசையில் ஜடேஜா, தோனி என அனைவரும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது. உத்தப்பா 50 ரன்களையும், ஷிவம் துபே 35 ரன்களையும், ராயுடு 27 ரன்களையும் குவித்தனர்.