
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய டெல்லிகேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர் மந்தீப் சிங் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய மிட்செல் மார்ஷ் 10ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 16 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
9 ஓவரில் 85 ரன்களுக்கு டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் டேவிட் வார்னர் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். தனது பழைய அணியான சன்ரைசர்ஸுக்கு எதிராக கங்கனம் கட்டி அடித்து ஆடினார் வார்னர். அவருடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோவ்மன் பவல் ஆரம்பத்தில் நிதானம் காத்து பின்னர் டெத் ஓவர்களில் காட்டடி அடித்தார்.