
IPL 2022: Dinesh Karthik, Shahbaz Ahmed's fire knock helps RCB comfortable wictory against Rajasthan (Image Source: Google)
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் ஆட்டமிழந்து மற்றுமொரு முறை ஏமாற்றமளித்தார். நன்றாக ஆடிய தேவ்தத் படிக்கல் 29 பந்தில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற ஜோஸ் பட்லருக்கு சரியாக ஷாட்டுகள் கனெக்ட் ஆகாமல் திணறினார். ஆகாஷ் தீப்பின் பவுலிங்கில் ஒரே ஓவரில் 2 கேட்ச்களை பட்லருக்கு தவறவிட்டனர் ஆர்சிபி வீரர்கள். பட்லருக்கு ஷாட் கனெக்ட் ஆகாததால் அணியின் ஸ்கோர் உயரவேயில்லை.