
IPL 2022: Faf Du Plessis knock helps RCB post a total on 181/6 (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 31ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு சமீரா வீசிய முதல் ஓவரே பேரிடியாக அமைந்தது. தொடக்க வீரர் அனுஜ் ராவத் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.