
IPL 2022 Final: BCCI Increased the IPL final ticket rate triple times (Image Source: Google)
நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் 100 சதவீத பார்வையாளர்களை பிளே ஆப் சுற்று முதல் அனுமதிக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.
இதனையடுத்து முதல் முறையாக ஐபிஎல் 15ஆவது சீசனின் இறுதிப் போட்டி நடைபெறும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்களக்கு மேல் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஐபிஎல் அணிகளுக்கும், பிசிசிஐக்கும் பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம், கரோனா அச்சுறுத்தலால் வரவில்லை. இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலையை பிசிசிஐ கடுமையாக உயர்த்தியுள்ளது.