
வரும் 29ஆம் தேதி அன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 70 லீக் போட்டிகள் கொண்ட இத்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில போட்டிகள் தான் லீக் சுற்றில் எஞ்சியுள்ளன.
ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் வரும் ஞாயிறு அன்று விளையாடும் போட்டிதான் கடைசி லீக் போட்டி. பிளே-ஆஃப் சுற்றில் முதல் இரண்டு போட்டிகள் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி மற்றும் குவாலிஃபையர் போட்டிகள் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதில் இறுதிப் போட்டியை முன்னிட்டு நடைபெறும் நிறைவு விழா காரணமாக ஆட்டம் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் கிரிக்கெட்டில் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விழா நடத்தப்பட உள்ளதாம். இதில் இந்திய கிரிக்கெட்டின் பயணம் குறித்த சிறப்புக் காட்சிகள் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்படும் என இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.