
ஐபிஎல் 2022 தொடரில் பிராபோர்னில் இன்று நடைபெற்று வரும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக இம்முறையும் கோலி- டு பிளசிஸ் இணை களமிறங்கியது. முதல் ஓவரிலேயே கோலி இரு பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தை ஆரவாரத்துடன் தொடங்கிவைத்தார்.
ஆனால் இந்த இணை 2ஆவது ஓவரை கூட தாண்ட முடியாமல் போனது சோகம். பிரதீப் சங்வான் வீசிய வேகப்பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார் டு பிளசிஸ். முதல் நான்கு ஆட்டங்களில் 3 முறை அரைசதம் கடந்த ஆர்சிபியின் ஓப்பனிங் கூட்டணி, அடுத்த ஆறு ஆட்டங்களில் ஒரு முறை கூட 20 ரன்களை கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த ராஜத் படிதாருடன் கூட்டணி சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.
விக்கெட் விழக்கூடாது என்ற நோக்கத்தில் கோலி ஒரு பக்கம் பொறுமையாக விளையாட, மறுபக்கம் கொஞ்சம் அதிரடி காட்டத் துவங்கினார் படிதர். அல்ஸாரி ஜோசம் வீசிய 5ஆவது ஓவரில் பவுண்டரிகளை இருவரும் விளாச, ஸ்கோர் உயரத் துவங்கியது. அதன் பின் இருவரும் பொறுமையாகவே விளையாடிய போதிலும், பெர்குசன் மற்றும் ஜோசப் வீசிய 10 மற்றும் 11வது ஓவரில் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி அசத்தினர்.