
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாட்ணடியா கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பெரும்பாலான போட்டியில் விளையாடவில்லை. ஆனால் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், அவர் பயிற்சியின் போது பந்துவீசி வருவதாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி பொய் சொன்னது.
இதனை நம்பி , ஹர்திக் பாண்டியாவை உலக கோப்பை அணியில் பிசிசிஐ சேர்த்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா காலை வாரினார். இதனால் பிசிசிஐ-யின் கோபத்திற்கு ஹர்திக் பாண்டியா ஆளாகினார். இதனால் ஹர்திக் பாண்டியா உடல் தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் தம்மை எந்த தொடரிலும் தேர்வு செய்ய வேண்டாம் என்று கூறினார்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் பரோடாவில் பயிற்சி முகாமில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில், உடல் தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி என்று பிசிசிஐ கூறியது. இதனால் பாண்டியாவும் பெங்களூரு சென்றார்.