
தீபக் சாஹர் மிகச்சிறந்த வீரர் என்பதைக் காட்டிலும், அண்மைக்காலத்தில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக கடந்த சில சீசன்களில் ஆடிவரும் தீபக் சாஹர், புதிய பந்தில் அருமையாக ஸ்விங் செய்து வீசக்கூடியவர். மேலும் பவர்ப்ளேயிலேயே ஒன்றிரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுக்கவல்லவர்.
சிஎஸ்கே அணிக்காக கடந்த சில சீசன்களாக சிறந்த பங்களிப்பு செய்துவரும் தீபக் சாஹரை ஏலத்திற்கு முன் தக்கவைக்காத சிஎஸ்கே அணி, ஏலத்தில் அவரை ரூ.14 கோடி கொடுத்து எடுத்தது.
நல்ல ஸ்விங் பவுலரான தீபக் சாஹர், புதிய பந்தில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர் மட்டுமல்லாது நன்றாக பேட்டிங்கும் ஆடக்கூடிய ஆல்ரவுண்டர். தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அருமையாக பந்துவீசியதுடன் அபாரமாக பேட்டிங்கும் ஆடினார். எனவே அவரது ஆல்ரவுண்ட் திறமையை பார்த்த அணிகள், ஐபிஎல் ஏலத்தில் அவர் மீது ஆர்வம் காட்டின.