
IPL 2022: KKR Beat CSK by 6 Wickets in the opening game! (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசன் இன்று தொடங்கியுள்ளது. மும்பை வான்கடேவில் நடைபெற்ற முதல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆர் அணியும் விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் நியூசிலாந்தின் டெவான் கான்வே ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேகேஆர் அணி சார்பில் முதல் பந்தையே நோ பாலாக வீசிய உமேஷ் யாதவ், ஃப்ரீ ஹிட்டில் ரன்னே கொடுக்காமல் அருமையாக வீசினார். 3ஆவது பந்திலேயே ருதுராஜை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் உமேஷ் யாதவ்.