
IPL 2022: KKR restricted Punjab Kings by 137 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு ரன்னுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய பானுகா ராஜபக்ஷா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். பின் 31 ரன்கள் சேர்த்திருந்த ராஜபக்ஷா, ஷிவம் மாவி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.