
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆடிவருகின்றனர். புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு டி காக்கும் தீபக் ஹூடாவும் சேர்ந்து அபாரமாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 85 ரன்களை சேர்த்தனர். டி காக் 46 ரன்னிலும், தீபக் ஹூடா 34 ரன்னிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த அனைத்து பேட்ஸ்மேன்களுமே சொதப்பினர்.
க்ருணல் பாண்டியா(7), மார்கஸ் ஸ்டோய்னிஸ்(1), ஆயுஷ் பதோனி(4), ஜேசன் ஹோல்டர் (11) ஆகிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் துஷ்மந்தா சமீராவும் மோசின் கானும் இணைந்து 30 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 153 ரன்கள் அடித்த லக்னோ அணி, 154 ரன்களை பஞ்சாப் கிங்ஸுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.