
IPL 2022: Lucknow Super Giants set a target on 177 against KKR (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 53ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் கேஎல் ராகுல் பந்துகளை சந்திக்காமலே ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் - தீபக் ஹூடா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையடிய டி காக் அரைசதம் கடந்தார்.