Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2022: சிஎஸ்கே ரசிகர்களுக்கு நற்செய்தியை வழங்கிய தோனி!

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக விளையாடுவேன் என்பதை தோனி உறுதி செய்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 20, 2022 • 20:02 PM
IPL 2022: MS Dhoni Confirms Playing In Next Season For Chennai Super Kings
IPL 2022: MS Dhoni Confirms Playing In Next Season For Chennai Super Kings (Image Source: Google)
Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு சீசன் மிக மோசமாக அமைந்துவிட்டது. 2020 சீசனை விடவும் மோசமானதாக உள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளில் மொத்த 4 போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது. 

தொடர்ந்து 9 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

Trending


பின்னர், மைதானத்தில் வர்ணனையாளர் கேட்ட கேள்விகளுக்கு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். முக்கியமாக அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “நிச்சயமாக. ஏனெனில் சென்னை ரசிகர்களுக்கு நேரில் நன்றி சொல்லாமல் செல்வது நியாயமாக இருக்காது. சென்னை மைதானத்தில் விளையாடாமல் மும்பையிலேயே விடைபெற்றுக் கொள்வது சென்னை ரசிகர்களுக்கு உகந்ததாக இருக்காது. வரும் சீசன்களில் அனைத்து மைதானங்களிலும் விளையாடும் போது அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நன்றி சொல்லி விடை பெறுவதே சரியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு சீசனில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்த போதும் இதோபோன்றதொரு கேள்வி எழுந்தது. அப்பொழுதும் இதேபோன்றுதான் நிச்சயமாக விளையாடுவேன் என்று தோனி பதில் அளித்தார். அடுத்த ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டி சிஎஸ்கே கோப்பையை கைப்பற்றியது. 

சொந்த மைதானத்தில் விளையாடும் போதும் நிச்சயம் சிஎஸ்கேவுக்கு கூடுதல் பலம் கிடைக்க வாய்ப்புள்ளது. நடப்பு சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த போதும் ஒவ்வொரு போட்டியின் போதும் மஞ்சள் நிறத்தால் மைதானத்தை ரசிகர்கள் நிரப்பி வருகின்றனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement