
ஐபிஎல் 15ஆவது சீசனின் துவக்க போட்டிகள், சிஎஸ்கேவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொண்டு 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் லக்னோ, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் சொதப்பல், தீபக் சஹார் இல்லாதது, பௌலர்கள் சொதப்பல்கள்தான். இதையனைத்தையும் சரிசெய்தால் மட்டுமே சிஎஸ்கே மீண்டும் கம்பேக் கொடுக்க முடியும் எனக் கருதப்படுகிறது.
அதேபோல் புதுக் கேப்டன் ரவீந்திர ஜடேஜா தனது கேப்டன்ஸி அழுத்தங்களை, சிறப்பான முறையில் எதிர்கொண்டு மீண்டும் அதிரடி காட்ட ஆரம்பித்துவிட்டால், சிஎஸ்கே மீண்டும் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவிக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.