
IPL 2022: Mumbai Indians beat Delhi Capitals by 5 wickets (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் டெல்லி கேப்பிட்டல்ஸும் ஆடிவருகின்றன. மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால், அந்த அணிக்கு இந்த போட்டியில் இழப்பதற்கு எதுவும் இல்லை.
ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியும். தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டும். எனவே வெற்றி கட்டாயத்தில் இன்று டெல்லி அணி களமிறங்கி ஆடிவருகிறது.
மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.