
ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்கிறது. இந்த தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் மும்பையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைப்பதற்காக இதர அணிகளை காட்டிலும் கடந்த வாரத்திற்கு முன்பே குஜராத் மாநிலம் சூரத் நகரில் வலை பயிற்சியை தொடங்கியது.
அதேபோல் இந்த தொடரில் பங்கேற்பதற்காக சமீபத்தில் நடந்த இலங்கை தொடரை முடித்துக்கொண்டு ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய இந்திய வீரர்கள் அந்தந்த அணிகளில் இணைந்துள்ளனர். அவர்களை போல இந்த தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட பல நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் அந்தந்த அணிகளில் இணைய தொடங்கியுள்ளனர்.