
ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சஹா 21 ரன்னில் நடையை கட்டினார். ஹர்திக் பாண்டியா(1), டேவிட் மில்லர்(11), ராகுல் டெவாட்டியா(11), ரஷீத் கான்(0) ஆகியோர் ஒருமுனையில் சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் நடையை கட்ட, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்ஷன் அரைசதம் அடித்தார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்று குஜராத் அணி 143 ரன்கள் அடிக்க உதவினார். சாய் சுதர்ஷன் 50 பந்தில் 64 ரன்கள் அடித்தார்.