IPL 2022: Punjab Kings beat Sunrisers Hyderabad by 5 wickets (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனில் இன்று நடந்துவரும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டதால் இன்று நடக்கும் போட்டி புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் ஆடியது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரியம் கர்க் 4 ரன்னில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா அடித்து ஆடி 43ரன்கள் அடித்தார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். மார்க்ரம் 21 ரன்கள் அடித்தார்.