
IPL 2022: Punjab Kings defeat Royal Challengers Bangalore by 54 runs (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியம்.
மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் முதல் ஓவர் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். அதிரடியாக ஆடி மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் சிக்ஸர் மழை பொழிந்த பேர்ஸ்டோ, 21 பந்தில் அரைசதம் அடித்தார். தவான் 21 ரன்னிலும், பானுகா ராஜபக்சா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.