Advertisement

ஐபிஎல் 2022: மீண்டும் மிரட்டிய தவான்; சிஎஸ்கேவுக்கு 188 டார்கெட்!

ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 188 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 25, 2022 • 21:19 PM
IPL 2022: Punjab Kings finishes off 187 on their 20 overs
IPL 2022: Punjab Kings finishes off 187 on their 20 overs (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 37ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக கேப்டன் மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் இணை களமிறங்கியது.

Trending


இதில் 18 ரன்களை எடுத்திருந்த கேப்டன் மயங்க் அகர்வால், மஹீஷ் தீக்ஷனா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - பனுகா ராஜபக்ஷா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் தனது 46ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட பனுகா ராஜபக்ஷா 42 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினார். அதன்பின் 19 ரன்களில் அவரும் விக்கெட்டை இழந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 187 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 88 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement