
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால், முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். ஆனால் 2வது பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். முதல் ஓவரில் மயன்க் அகர்வால் அவுட்டாக, 2வது ஓவரில் பானுகா ராஜபக்சா 9 ரன்னில் ரன் அவுட்டானார்.
14 ரன்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி 27 பந்தில் அரைசதம் அடித்தார். ஷிகர் தவான் 33 ரன்னில் ஆட்டமிழக்க, 32 பந்தில் 60 ரன்கள் அடித்து லிவிங்ஸ்டோனும் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு தவானும் லிவிங்ஸ்டோனும் சேர்ந்து 95 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் அறிமுக வீரர் ஜித்தேஷ் ஷர்மா 17 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் அடித்தார்.